MARC காட்சி

Back
திரிபுராந்தகர்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a திரிபுராந்தகர்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a மூவெயில் எறிந்த முக்கண்ணரின் திருக்கோலமாகிய திரிபுராந்தகர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று கோட்டைகளை அழிப்பதற்கு சிவனார் பூண்ட திருக்கோலமே திரிபுராந்தகர். 64 சிவ வடிவங்களுள் ஒன்றான திரிபுராந்தகர் வடிவம் இறைவனின் எட்டு வீரச் செயல்களுள் ஒன்றான முப்புரமெரித்த லீலையை சொல்லும் கோலமாகும். தஞ்சை பெரிய கோயிலின் கருவறை விமானத்தில் வரிசையாக திரிபுராந்தகர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. முப்புரங்களை எரித்த சிவனாரின் பேராற்றலைப் போல சோழர்கள் மூன்று நிலங்களையும் வென்று அடக்கியவர்கள். குறிப்பாக முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் சோழப் பேரரசு சேரர், பாண்டியர், ஈழவர் உள்ளிட்ட வடபுல மன்னர்களையும் வென்றடக்கி, கடற்கடந்தும் பரந்து கிடந்த பேரரசாக அமைந்திருந்தது. சோழர்களின் இவ்வெற்றியைக் குறிக்கவே திரிபுராந்தகர் சிற்பம் பெரிய கோயிலில் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன என்பது நோக்கத்தக்கது. திரிபுராந்தகர் வலது காலை ஊன்றி, இடது காலை தளர்வாக வைத்து வைஷ்ணவ நிலையில் வில்லினை தோளில் சார்த்தி நின்றுள்ளார். ஜடாமகுடராய் விளங்கும் மூவெயில் எரித்த பிரான் நெற்றியில் கண் கொண்டு போருக்கு புறப்படுபவராய் நிற்கிறார். சிவனார் கொண்ட நான்கு கைகளில், பின் கைகளில் சூலப்படையையும், (சக்திப் படையாகவும் இருக்கலாம்), கமண்டலத்தையும் கொண்டுள்ளார். முன்னிரு கைகளில் வில்லினையும், அம்பையும் தாங்கியுள்ளார். முத்து அல்லது மணிகளாலான நெற்றிப்பட்டை, நீள் காதுகளில் வலதில் மகர குண்டலம், இடதில பத்ர குண்டலம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், தோள்களில் வாகுமாலை, கைகளில் கேயூரம், முன்வளைகள் ஆகியன அணி செய்கின்றன. இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை உடுத்தியுள்ளார். இடைக்கட்டின் முடிச்சு முன் நீண்டு தொங்குகிறது. கால்களில் வீரக்கழல்கள் விளங்குகின்றன.
653 : _ _ |a திரிபுராந்தகர், முப்புராரி, திரிபுராரி, புரரிபு, முப்புரமெரித்தவர், மூவெயில் எறிந்தோன், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
914 : _ _ |a 10.7831901
915 : _ _ |a 79.13123578
995 : _ _ |a TVA_SCL_000377
barcode : TVA_SCL_000377
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000377_தஞ்சை-பெருவுடையார்-கோயில்_திரிபுராந்தகர்-001.jpg